ஆன்மீகம்

வளமான வாழ்வை அருளும் ரத்தினமங்கலம் லட்சுமி குபேரர் திருக்கோயில்...

A
Admin User
1 min read
வளமான வாழ்வை அருளும் ரத்தினமங்கலம் லட்சுமி குபேரர் திருக்கோயில்...
Advertisement
Editor's Choice
Affiliate link

Dyazo 6 Angles Adjustable Aluminum Ergonomic Foldable Portable Tabletop Laptop/Desktop Riser Stand Holder Compatible for MacBook, HP, Dell, Lenovo & All Other Notebook (Silver)

Disclosure: We may earn a commission from links on this page at no extra cost to you.

அருள்மிகு லட்சுமி குபேரர் திருக்கோயில். இந்தியாவிலேயே லட்சுமி குபேரருக்கு சென்னை வண்டலூர் அருகே ரத்தினமங்கலத்தில் மட்டும் தான் கோயில் இருக்கிறது. குபேரன் காட்சிதரும் கோலமே பெரும் பரவசத்தை ஏற்படுத்தும். சிரித்த முகம், இடது கையில சங்கநிதி, வலது கையில பதுமநிதி அடங்கிய கலசத்தை அணைத்தபடி அன்னை லட்சுமி, துணைவி சித்தரிணீயுடன் குபேரன் தரும் காட்சியை காண கண் கோடி வேண்டும்.

கோயிலை சுற்றியிருக்கும் பிரகாரத்தில் லட்சுமி கணபதி, குபேர லிங்கம், செல்வ முத்துக்குமரன், யோக ஆஞ்சநேயர், நவ கிரகங்கள் மற்றும் கோசாலையும் உள்ளது. செல்வத்துக்கு அதிபதி லட்சுமி, அதை கண்காணித்து காப்பவர் குபேரர். இந்த இருவரையும் சேர்த்து லட்சுமி குபேர பூஜை செய்து வந்தால் நிலையான செல்வம் உண்டாகும். இழந்த செல்வத்தையும் திரும்ப பெற்று புகழோடு வாழ முடியும்.

திருப்பதிக்கு போவதற்கு முன்பு இரத்தினமங்கலம் குபேரரை தரிசித்து விட்டு செல்வது மிகவும் விஷேசமானது. வளமான வாழ்விற்காக இங்கு லட்சுமி குபேர பூஜை செய்வதும் விசேஷம். இந்த பூஜைய பெளர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தீபாவளி அன்று இந்த கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்படும். அன்றைய தினம் லட்சுமி குபேரரை வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்குமாம். வாய்ப்பு கிடைத்தால் இந்த கோயிலுக்கு சென்று வாருங்கள். உங்களது நிதி சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும்.

Advertisement

Read Next