ஆண்கள் இரவில் பால் கூட இத சாப்பிடுறதுல இவ்ளோ விஷயம் இருக்கா!!!
Dyazo 6 Angles Adjustable Aluminum Ergonomic Foldable Portable Tabletop Laptop/Desktop Riser Stand Holder Compatible for MacBook, HP, Dell, Lenovo & All Other Notebook (Silver)
உடல் பலவீனம் என்பது இன்றைய காலக்கட்டத்தில் சர்வ சாதாரணமாகி விட்டதால் அதை போக்க ஆண்கள் பலவிதமான சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். இருப்பினும், ஆண்கள் தினமும் பால் மற்றும் 3 பேரீச்சம்பழங்களை மட்டும் சாப்பிட்டாலும் இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க முடியும். ஆம், ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி, பால் மற்றும் பேரிச்சம்பழம் உட்கொள்வது ஆண்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. இரவில் பால் மற்றும் 3 பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளபோகிறோம்.
ஆயுர்வேத நிபுணர் கூற்றுப்படி, உலர் பேரிச்சம்பழத்தின் சுவை இனிமையானது. இது பேரிச்சம்பழத்தை உலர்த்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. உண்மையில் இதில் மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இப்போது அவற்றை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கக் கூடிய நன்மைகளைப் பார்ப்போம்.
உடல் பலவீனம் நீங்கும்
ஆண்களின் மெலிந்த உடலமைப்பு உடல் பலவீனத்தின் அறிகுறியாகும். இது பாலியல் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில், ஆண்கள் தினமும் இரவில் ஒரு கிளாஸ் பாலில் 3 பேரீச்சம்பழங்களை சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். பேரீச்சம்பழத்தில் உள்ள புரதம் தசைகளுக்கு வலிமையை வழங்க உதவும். இதனால், உடல் பலவீனம் அகலும்.
மலச்சிக்கலில் இருந்து நிவாரணம்
இன்றைய காலகட்டத்தில் மலச்சிக்கல் பிரச்சனை என்பது பலருக்கும் இருக்கக்கூடியது. அதற்கு மாறுபட்ட உணவு முறைகள் தான் காரணம். இருப்பினும், பால் மற்றும் பேரிச்சம்பழம் உட்கொள்வதன் மூலம் மலச்சிக்கலை சுலபமாக போக்கலாம். ஆம், பேரீச்சம்பழத்தை உட்கொள்வதன் மூலம் உடலுக்கும் போதுமான அளவு நார்ச்சத்து கிடைக்கும். மேலும் இது செரிமான மண்டலத்தை பலப்படுத்தி மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை அடியோடு நீக்கிவிடும். மலச்சிக்கலை போக்குவதற்கு மிகு சுலபமான வழியும் இது தான்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்
ஆண்களுக்கு நீரிழிவு பிரச்சனை இருந்தால், அவர்களது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த பேரிச்சம்பழத்தை சாப்பிடலாம். ஏனெனில் இது குறைந்த ஜி.ஐ. அதாவது அதன் நுகர்வு இரத்தத்தில் இரத்த சர்க்கரையை வேகமாக அதிகரிக்காது. இதன்மூலம். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திட முடியும். இதற்கு தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு டம்ளர் பாலுடன் 3 பேரிச்சம்பழங்களை சேரத்து சாப்பிட்டு வர வேண்டும்.