ஆரோக்கியம்

கூந்தல் பிரச்சனை முதல் இரத்த அழுத்தம் வரை அனைத்தையும் சரி செய்திட இந்த பழத்தை சாப்பிட்டா போதும்...

A
Admin User
1 min read
கூந்தல் பிரச்சனை முதல் இரத்த அழுத்தம் வரை அனைத்தையும் சரி செய்திட இந்த பழத்தை சாப்பிட்டா போதும்...
Advertisement
Editor's Choice
Affiliate link

FLYNGO Touch Control LED Night Light Table Lamp for Bedroom, Living Room, and Study, with Adjustable Brightness, USB Rechargeable (A1)Plastic ,White

Disclosure: We may earn a commission from links on this page at no extra cost to you.

கருப்பான அடர்த்தியான கூந்தலை வேண்டுமென்று அனைவருமே விரும்புவார்கள். ஆனால் இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், பெரும்பாலும் மக்கள தங்கள் ஆடை அலங்காரத்திற்கு கொடுக்கும் கவனத்தை தலைமுடிக்கு சிறிதும் செலுத்துவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் முடி உதிர்தல் மற்றும் முடி உடைதல் போன்ற கடுமையான பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இன்றைய காலகட்டத்தில் இளநரை, முடி உதிர்வது அல்லது வழுக்கை வருவது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. உலகில் பலர் இந்த சிக்கலை எதிர்கொள்கின்றனர். ஆனால் இதற்கும் ஒரு இயற்கையான தீர்வு இருக்கிறது. அதுதான் சீத்தாப்பழம்! ஆம், இந்தப் பழத்தை உட்கொள்வதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இதனுடன், இந்த பழம் முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். அதன் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இப்போது இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்வோம்…

சீத்தாப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்

ஆயுர்வேதத்திலும் சீத்தாப்பழத்தின் பண்புகள் பற்றிய ஒரு விளக்கம் உள்ளது. ஸ்ரீ ராமரின் வனவாசத்தின் போது சீதா தேவி இந்த பழத்தை அவருக்கு அளித்ததாக நம்பப்படுகிறது. அன்றிலிருந்து இது சீத்தாப்பழம் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆயுர்வேதத்தின் படி, சீத்தாப்பழம் உடலுக்கு அதிக குளிர்ச்சியை தருகிறது. இந்த பழம் கொலரெடிக், ட்ரைகுஸ்பிட், வாந்தி எதிர்ப்பு, ஊட்டச்சத்தானது, சளி மற்றும் விந்து, தசை மற்றும் இரத்தத்தை மேம்படுத்தும், உடலை வலிமையாக்கி, வாத தோஷத்தை தணிக்கும் மற்றும் இதயத்திற்கு முற்றிலும் நன்மை பயக்கும்.

  • சீத்தாப்பழ இலைகளை அரைத்து கொப்புளங்கள் மீது பூசுவதுன் மூலம் அது விரைவில் குணமாகும். சீத்தாப்பழ கொட்டைகளை ஆட்டுப்பாலுடன் சேர்த்து அரைத்து, கூந்தலில் தடவினால், கூந்தல் உதிர்ந்த இடத்திலும் மீண்டும் முடி வளரும்.

  • சீத்தாப்பழம் நரம்புத் தளர்ச்சியை நீக்கி இதயத் துடிப்பை மேம்படுத்துகிறது. பலவீனமான இதயம் அல்லது உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை உள்ளவர்கள் இதை சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • சீத்தாப்பழத்தை பச்சையாக சாப்பிடுவது வயிற்றுப்போக்கு மற்றும் பேதிக்கு மிகவும் நன்மை பயக்கும். சீத்தாப்பழத்தை பச்சையாக நறுக்கி காயவைத்து அரைத்து நோயாளிக்கு ஊட்டவும். இது வயிற்றுப்போக்கையும் உடனே நிறுத்தி விரைவில் உடலை குணப்படுத்தும்.

  • சீத்தாப்பழம் சிறந்த மருந்தாகவும் செயல்படுகிறது. இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் பலவீனம் நீங்கி சிறந்த உடல் ஆற்றலைப் பெற்றிடலாம்.
Advertisement

Read Next