ஆரோக்கியம்

அளவுக்கு அதிகமா தண்ணி குடிச்சா உயிருக்கே ஆபத்தாம்!!!

A
Admin User
1 min read
அளவுக்கு அதிகமா தண்ணி குடிச்சா உயிருக்கே ஆபத்தாம்!!!
Advertisement
Editor's Choice
Affiliate link

Casio Youth Series Digital Black Dial Unisex Watch - F-91W-1Q(D002)

Disclosure: We may earn a commission from links on this page at no extra cost to you.

உடலுக்கு எப்போதும் போதுமான அளவு நீர் அவசியம் தேவை. அப்படி உடலில் தேவையான அளவு நீர் இல்லாத போது டீஹைட்ரேஷன் எனப்படும் நீரிழப்பு ஏற்படக்கூடும். அதனால் தான் ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டுமென்று சொல்வதுண்டு. குளிர்காலத்தில் குளிர்ச்சியாக சூழல் காரணமாக நமக்கு அவ்வளவு நீர் தாகம் எடுக்காது. அதனால் கோடைகாலத்துடன் ஒப்பிடுகையில் குளிர்காலத்தில் குறைவாக தண்ணீர் அருந்துவோம். எப்போதும் உடலுக்கு தேவையான அளவு நீர் அருந்துவது தான் உடலுக்கு நல்லது. அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது தண்ணீருக்கும் பொருந்தும். அளவிற்கு அதிகமாக தண்ணீரை அருந்தினால் பலவிதமான நோய்களுக்கு அது வழிவகுக்கும். சில சமயங்களில் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடுமாம். இந்த கட்டுரையில் அதைப் பற்றி தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

அதிக தண்ணீர் குடிப்பதால் அதிகப்படியான நீரேற்றம் ஏற்படும். எனவே முதலில் அதன் அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள்…

ஓவர் ஹைட்ரேஷன் அறிகுறிகள்

*தலைவலி
*உடற்சோர்வு
*மயக்க உணர்வு
*குமட்டல்
*மங்கலான பார்வை
*அமைதியின்மை
*எரிச்சல்
*தசை அதிர்வுகள்
*தசைப்பிடிப்பு
*வயிற்று போக்கு
*எச்சில் ஊறுவது
*ஹைப்பர்பிரெக்ஸியா, அதாவது அதிகப்படியான காய்ச்சல்
*அன்ஹைட்ரோசிஸ் என்றால் வியர்க்காமல் இருப்பது

அதுமட்டுமின்றி, அதிகப்படியான நீரேற்றத்திற்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இந்த அறிகுறிகள் மயக்கம், வலிப்பு, கோமா, மூளை பாதிப்பு அல்லது மரணத்தைக் கூட ஏற்படுத்தக்கூடும்.

அதிக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்

ஹைபோநெட்ரீமியா
அதிகமாக தண்ணீர் குடிப்பது ஹைபோநெட்ரீமியா அபாயத்திற்கு வழிவகுக்கும். அதாவது, இரத்தத்தில் சோடியத்தின் அளவு அசாதாரணமாக குறையும் போது இது நிகழ்கிறது. அளவிற்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால் இது ஏற்படலாம்.

அழற்சி பிரச்சனைகள்
அளவிற்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதும் வீக்கத்திற்கு வழிவகுக்கும். உடலில் சோடியத்தின் அளவு குறையும் போது, உடலில் இருக்கக்கூடிய நீர், செல்களுக்குள் நுழையத் தொடங்குகிறது. இது உயிரணுக்களுக்குள் அதிகப்படியான நீர் உள்ளடக்கத்திற்கு வழிவகுத்து வீக்கத்தை ஏற்படுத்தும்.

வயிற்றுப்போக்கு பிரச்சனை
அதிகமாக தண்ணீர் குடிப்பது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உண்மையில் வயிற்றுப்போக்கு பிரச்சனை நீர் நச்சுத்தன்மையின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. எனவே, எப்போதும் போதுமான அளவு நீர் மட்டுமே குடிக்க வேண்டும்.

Advertisement

Read Next