தொப்புள்ள தேன் தடவுனா முகப்பரு போய்டுமா???
Dyazo 6 Angles Adjustable Aluminum Ergonomic Foldable Portable Tabletop Laptop/Desktop Riser Stand Holder Compatible for MacBook, HP, Dell, Lenovo & All Other Notebook (Silver)
தேன் ரொம்பவே சுவையானது. அதே நேரத்தில் அது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது என்பதால் தான் அனைவரும் தேனை விரும்பி சாப்பிட்டிருப்பீர்கள். இது தவிர, உங்கள் சருமம் மற்றும் முடியின் அழகை அதிகரிக்கவும் தேன் பயன்படுத்தப்பட வேண்டும். தொப்புளில் தடவுவதற்கும் தேன் பயன்படுத்தப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தொப்புளில் தேனை தடவுவது ஆரோக்கியத்திற்கு மிகுந்த பலன்களைத் தரும் என்று கூறப்படுகிறது. ஆம், இன்று நாம் அந்த நன்மைகளைப் பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
தொப்புளில் தேன் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்
சரும வறட்சி நீங்கும்
வறண்ட சருமம் இருப்பவர்கள் தொப்புளில் தேனைத் தடவி வந்தால் சரும வறட்சி நீங்கி இயற்கைப் பொலிவை பெற்றிடலாம். எனவே, இனி சரும வறட்சி நீங்க கெமிக்கல் நிறைந்த க்ரீம்களை வாங்கி தடவுவதை விட்டுவிட்டு, தேனை பயன்படுத்தி பாருங்கள்.
முகப்பரு நீங்கும்
முகப்பரு பிரச்சனையை நீக்கவும் தேன் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு இரவில் தூங்கும் முன்பு தொப்புளில் தேனைத் தடவுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் முகப்பரு பிரச்சனை விரைவில் நீங்கும்.
தொப்புள் தொற்று தடுக்கப்படும்
தொப்புளை சரியாக சுத்தம் செய்ய முடியாவிட்டால், தொப்புளில் ஒருவித தொற்று ஏற்படுகிறது. எனவே, அதனை நீக்க தேனில் ஒரு துளி இஞ்சி சாறு கலந்து தொப்புளில் தடவவும். தேனில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது தொற்றுநோயை எளிதாக அகற்ற உதவுகிறது.
செரிமானத்தை சீராக்கும்
இஞ்சி சாறுடன் தேன் கலந்து தொப்புளில் தடவினால் செரிமான பிரச்சனை சரியாகும். அதுமட்டுமின்றி, செரிமான கோளாறால் ஏற்படக்கூடிய வயிற்று வலியைக் போக்குவதிலும் இது சிறந்தது.
மலச்சிக்கலைப் போக்கும்
மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள், தங்கள் தொப்புளில் தேனை தடவி வருவது சிறந்த நிவாரணத்தை அளிக்கும். நீண்ட நாட்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்கள் இந்த குறிப்பை பின்பற்றினால் உடனடி பலன் கிடைக்கும்.
எந்த நேரத்தில் பயன்படுத்துவது?
இரவில் தூங்குவதற்கு முன்பு தொப்புளில் தேனைப் பயன்படுத்துவது நல்லது. இருப்பினும், சில காரணங்களால் இரவில் தொப்புளில் தேன் தடவ முடியாவிட்டால், பகல் வேளையில் ஓய்வெடுக்கும் போது 2 முதல் 3 மணி நேரம் தொப்புளில் தேனை தடவி வந்தால் போதுமானது.